பக்கங்கள்

திங்கள், செப்டம்பர் 19, 2011

கனவுகள்...


கனவுகள் நம் வாழ்க்கையின்
மிச்சங்களா?

நம் உள்மனத்தின் பிரதிபலிப்பபா?

நம் வாழ்க்கையில் நடக்காத விஷயங்கள் கொஞ்சம்
அதிகமாக உயிரூட்டப்பட்டு கனவாக மாறுகிறதா?

கனவுகளில் வண்ணங்கள் உண்டா?

கனவுகளில் வரும் முகங்களோ, உருவமோ நிஜமாக இருக்க முடியுமா?

ஆழ்ந்த உறக்கங்களில் கன்வுகள் வருவதில்லை என்றும், ‘ நான்ரெம்’ எனப்படும் பாதி நிலை உறக்கங்களில் கனவுகள் தோன்றுகிறது என்றும் சில புத்தகங்காளில் படித்திருக்கிறேன்.

[இயற்பியல் பயின்ற நான் சைக்கலாஜி ப்ற்றியோ, கனவுகள் பற்றியோ படிப்பது மற்றும் பேசுவது அவசியம் தானா என்பது நீங்கள் கேட்பது எனக்கு புரிகிறது. ஆனால் அடிப்படையில் சைக்கலாஜி  படிக்கும் ஆர்வம் இயற்பியல் படித்தவர்களுக்கு  கொஞசம் அதிகம் தான் என்பது என் கருத்து]

என் பார்வையில் கனவு என்பது...

இரவின் கருப்புத் திரைப்படங்கள்...

கற்பனையின் காட்சி தத்ரூபங்கள். ..

உள் மனத்தின் உணர்ச்சி வெளிப்பாடுகள்…..

ஆம்...

ஒவ்வொரு  இரவிலும் நாம் உறங்கிய பிறகு நம் மூளையானது  அன்று காலை எழுந்தது முதல் உறங்க செல்வதற்கு முன் வரை நாம் செய்த அணைத்து  நிகழ்வுகளையும் மீண்டும் ஓட்டிபாற்கும்...
இந்த கருப்பு திரை படங்களுக்கான காட்சிகளை அரங்கேற்றம் செய்வது
நமது ஆன்மா தான்.
  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக