பக்கங்கள்

ஞாயிறு, செப்டம்பர் 18, 2011

நம் மனதிற்கு இரண்டு நிலைகள் உண்டு...

நம் மனதிற்கு இரண்டு  நிலைகள் உண்டு...

1.உணர்வு நிலை.

2.குண நிலை.

உணர்வு என்பது மனதின் தற்காலிக நிலை.
குணம் என்பது மனதின் நிரந்தர நிலை.


நம் மனதானது  தற்காலிக நிலையில் சஞ்சலிக்கும் பொழுது தான்
சந்தோசம்,துக்கம்,விருப்பு,வெறுப்பு,கோவம்,பசி போன்ற
உணர்வுகள் நமக்கு வெளிபடுகின்றன.
நம் மனதானது நிரந்தர நிலையில் சஞ்சலிக்கும் பொது தான் நன்னடத்தை,தீயநடத்தை,சந்தேகம் கொள்ளுதல்,
அன்பாக நடந்துகொள்ளுதல் போன்றவைகள்  குணங்கள் நமக்கு வெளிப்பாடுகின்றன.

எப்பொழுது  ஒரு உணர்வானது மீண்டும் மீண்டும்  பல தருணங்களில் ஒரு மனிதனுக்கு எட்டிபார்கிறதோ அது கால போக்கில்   அவனுடைய குணமாக மாற கூடும்.

இங்கு நான் கேட்க விரும்பிகிற விஷயம் என்னவென்றால் கோவம்,வெறுப்பு, போன்றவற்றை  குணமாகிக்  கொண்ட மனிதன் ஏன் சந்தோஷத்தை ஒரு குணமாக மாற்றி கொள்ளவில்லை  இன்னும்?

இந்த  நிலை நீடித்தால் நம் அடுத்த சந்ததியர்கள் சந்தோசம் என்பது
இப்படி தான் இருக்கக்கூடும்  என்று அருங்காட்சியகத்தில் சென்று தான் படைப்புகள்,ஓவியங்கள் மற்றும் சிலைகள் வாயிலாக தெரிந்து கொள்ள கூடும்.
அனைவரும் சிரிக்க(புன்னகைக்க)  கற்றுகொள்ளுங்கள்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக