பக்கங்கள்

வியாழன், ஜனவரி 19, 2012

புத்தகச் சுமை

நள்ளிரவு...

முகமூடி அணிந்த ஒரு திருடன்.

ரகசியமாய் ஒரு வீட்டினுள் நுழைந்தான்.

அப்பாவும் அவரது ஆறு வயது மகளும்

அமைதியாய்  தூங்கிக் கொண்டிருந்தார்கள்.

துரிதமாய் செயல்பட்ட திருடன் பீரோவை திறந்தான்.

பணம் மற்றும் நகைகளை வாரி மூட்டை கட்டினான்.

சின்ன சத்தம் கூட இல்லாமல்

வேலையை முடித்துக் கொண்டு வெளியேற முயன்றான்.

அப்போது...

சின்னதாய்  ஒரு சத்தம்.

பார்த்தால்...

எதிரே அந்த ஆறு வயதுச் சிறுமி.

பார்த்தவுடன்,  வியர்த்து நின்றான் திருடன்.

சிறுமியோ...

கத்தி கூப்பாடு போடவில்லை.

ஊரை கூட்ட வில்லை.

ஆனால்...

உருட்டும் விழிகளோடு

சன்னமான குரலிலே மிரட்டி நின்றால்.

" ஏய்! என்ன நகை மூட்டையோட கிளம்பிட்ட?

   அதோ கிடக்குது பார்...

   என்னோட பள்ளிக்கூட புத்தக மூட்டை.
 
   மரியாதையா அதையும் தூக்கிட்டுப்
  
   போய்டு.

   இல்லையின்னா...

   கத்தி  கூப்பாடு போட்டு அப்பாவை
 
   எழுப்பிவிடுவேன் !"

பயந்து புத்தக மூடையுடனும் சேர்த்து இடம் பெயர்ந்தான் அந்த திருடன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக