
ஏ பெண்ணே !
முகக்கன்னாடியில் உன் முகம் காட்டு.
மையிட்ட உன் இரு கரு விழிகளின்
இமையின் விளிம்பிலிருந்து எட்டிப்பார்த்த
உன் கண்ணீர்த்துளிகள்
இறக்க முற்படுகின்றன.
உற்றுப் பார் .
இருத்தி வைக்க உன் இமைகளோ
துடி துடிக்கின்றன.
உற்றுப் பார் .
செவி மடித்து கேள்.
உனக்கும் எதிரொலிக்கும்.
அதன் ஊடல் வார்த்தைகள்.
ஆம்...
இமை கேட்கிறது கண்ணீர்த்துளியை பார்த்து...
"நீ ஏன் என்னை விட்டு பிரிந்து செல்கிறாய்?" யென்று.
கண்ணீர்த்துளி சொன்னது....
"பிறந்த இடத்தில் இருந்தால்
எனக்கு பெருமை இல்லை."
என்னை தடுக்காதே யென்று.
இமைக்கு புரிந்தது.
அதனூடே
காலமெல்லாம்
அன்பால்,
ஆனந்தத்தால்,
மற்றும்
வலியால்
உன் விழிகளில் திரளும் கண்ணீர்த்துளிகளை
இறக்க அனுமதித்தது இமை.
எனக்கும் புரிந்தது...
உணர்வை வெளிப்படுத்தி
மனதை பலப்படுத்தும்
வழி இது தானோ யென்று!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக