
சற்றே உங்கள் சிந்தனையை ஓட்டிப்பாருங்கள்...
நான் மேல் எழுப்பியுள்ள வினாவிற்கான பதில்
கிடைக்கும் வரையில்.
ஆமாம்...
நான் கேட்கிறேன்.
பிச்சை எடுப்பவன் எல்லாம் பிச்சைக்காரனா ?
எனக்கு அப்படி ஒன்றும் தோன்றவில்லை.
ஒரு தகுதியான பிச்சக்காரனை இனம்காண
நான் கூறும் இந்த மூன்று தகுதிகளை(அம்சங்களை) கையாளுங்கள்.
1 . எது நடக்க வேண்டும் என்பது அவன் கட்டுப்பாட்டில் இருக்காது.
2 . அவன் விரும்புவது அவனுக்கு கிடைக்காது.
3 . விரும்புவது கிடைத்தாலும் தேவையான அளவு கிடைக்காது.
மேற் சொன்ன குறைபாடுகள் யாருக்கு இருந்தாலும் அவன் பிச்சைக்காரனே.
மேற் சொன்ன குறைபாடுகள் இல்லையெனில் ஒரு பிச்சைக்காரனும்
பணக்காரனே.
இன்று நம்மில் பலர் அனைத்து விஷயங்களும் இருந்தும்
பிச்சக்காரர்களாய் தான் உலாவுகின்றோம் இல்லையா!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக