பக்கங்கள்

புதன், செப்டம்பர் 21, 2011

விதியின் விளையாட்டு



அன்று  சொர்க்கத்தில் உள்ள லீ மெரிடியன் ஹோட்டல் கலை கட்டியிருந்தது.
   
அந்த ஐந்து  நட்சத்திர  ஹோட்டலின் போர்டிகோ(முகப்பு வாயில்) முழுவதும் ஏகபோக ஆரவாரத்துடன் ஆடம்பர உடை சகிதமாக காட்சியளித்தார்கள்   உலகின்(பெரிய மற்றும் சிறிய )கடவுள்கள் அனைவரும்.

அன்றைய தினம் பிரம்மா(ஆக்கும்கடவுள்)
தலைமையில் ஹோட்டலின் கான்பெரென்ஸ் ஹாலில் ஒரு சிறப்பு கூட்டம் ஏற்பாடு செய்யபட்டிருந்தது(அப்படி அவர்களுக்குள் என்ன தான் பிரச்சனையோ அந்த கடவுள்களுக்கு  தான் வெளிச்சம்).

ஒவ்வொரு  கடவுளும் தங்களுடைய வாகனத்தை அருகாமையில் பார்க் செய்து விட்டு பரபரப்பாக கூட்டம் நடக்கும் ஹாலை நோக்கி விரைந்தார்கள்.

இந்த அவசர கூட்டம் பற்றிய விஷயத்தை   சொர்க்கத்தில் உள்ள ஒரு ஆருயிர் நண்பன் எனக்கு மின்னஞ்சல்  மூலமா தெரிய படுத்த.
உடனே ஹோட்டல் லீ மெரிடியன்(சொர்க்கதில்உள்ள பிரான்ச்)
முகப்பு  வாயிலுக்கு  படையேடுத்தேன். 

கூட்டம் இன்னும் 1௦ நிமிடங்களில் துவங்க போகும் தருணம்.

ஒரு சில கடவுள்கள் என் கண்ணில் தென்பட்டார்கள்.

ஆம்....... 

விநாயகர் தன்னுடைய மூஞ்சிரு வாகனத்தை பார்க் செய்து விட்டு உள்ளே விரைந்தார்.

மதுரை மீனாட்சி தன்னுடைய பச்சைக்கிளி வாகனத்தை  பார்க் செய்து விட்டு உள்ளே விரைந்தார்.

கூட்டம் துவங்க இன்னும் 5  நிமிடங்களே உள்ள தருணம்.

கடைசியாக கம்பீரமாக உள்ளே வந்த எமதர்மன் தன்னுடைய எருமை வாகனத்தை பார்க் செய்யும் போது அருகே நின்ற பச்சைக்கிளியை ஒருமுறை நக்கலாக பார்த்து சிரித்து விட்டு விரைந்தார் தனது  
இருக்கையை ஆட்கொள்ளவதற்கு. 

ஆனால் இங்கு மனதினுள் ஒரு பதபதைப்பு எற்பட்டது  பச்சைகிளிக்கு.
ஆம் அதற்கு தெரியும் எமதர்மன் நக்கலாய் சிரித்தால் மரணம் உடனே அழைக்கிறது என்று.

ஒரே இடத்தில் நிம்மதியாக  இருக்க முடியாமல் இங்கும் அங்குமாக அலாவிகொண்டிருந்தது அந்த அற்ப உயிரி அடுத்து தனக்கு என்ன நிகழ போகிறது என்று தெரியாமல்.

தன்னை இந்த குழப்பமான சூழலிருந்து விடுவித்து கொள்ள தனது எஜமான் மதுரை மீனாட்சியின் வரவிற்காக காத்து கொண்டிருந்தது...

கூட்டம் இனிதே முடிவுற வெளியே வந்த  மீனாட்சியிடம் தனது
நிலையை கண்ணீர் ததும்ப விளக்கியது பச்சைக்கிளி.

நிலைமையை அறிந்த மீனாட்சி உடனே அங்கு வந்த சித்திரகுப்தனிடம் கிளியை பார்த்து எமதர்மன் நக்கலாய் சிரித்ததன்   காரணம் கேட்டதும்,வெகுண்டாள் மீனாட்சி.

தனது வாகனமான பச்சைகிளியின் விதியானது(உயிர் இன்னும் சில
வினாடிகளில்முடிய போகிறது)முடியும் தருவாயில் 
இருப்பதை தன் குறிப்பேட்டில் பார்த்து  சித்திரகுப்தன் கூறியதுதான் காரணம்..

தனது வாகனத்தை எமன் சீண்டுவதா என்று கர்ஜித்து கொண்டு,எமன் வந்து பச்சைகிளியின் உயிரை எடுக்கும் முன் அதனை பல ஆயிரம்  
மைல்களுக்கு  அப்பால் இருக்கும் ஒரு  மலைஅடிவாரத்தில் கொண்டு
போய் மறைத்து வைத்தாள் மீனாட்சி.ஏனெனில் சில நிமிடங்களே இருக்கும்  நிலையில் எமனால் அவ்வளவு நெடுந்தொலைவிற்கு
பயணித்து பச்சைகிளியை கண்டு கொள்வதற்குள் அதன் விதி காலம் முடிந்து உயிர்பிழைக்கும் அல்லவா.

நிம்மதி பெருமூச்சுடன் நின்று கொண்டிருத்த மீனாட்சிக்கு 
அருகே மௌனமாய் வந்து நின்றார் எமதர்மன்.

கோபமாய் எமனை எதிர்நோக்கிய மீனாட்சி தன் வாகனத்தை பார்த்து ஏளனமாய் எள்ளி நகைத்தன் உள் அர்த்தம் வினவினால்.

மீண்டும் மெல்லியதாய் நகைத்து கொண்டு எமன் கூறினான்,

"அன்னையே உங்கள் வாகனத்தை நான் பார்த்த பொழுது அதன் தலை விதி எனக்கு சுட்டி காட்டியது என்னவென்றால்..இன்னும் சில நிமிடங்களில்.பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இருக்கும் 
ஒரு மலையடிவாரத்தில் ஒரு  பூனையால் கடிபட்டு  உங்கள் வாகனமான பச்சைக்கிளி உயிர் நீக்க போகிறதென்று"

நான் நகைததற்கு காரணம் உங்கள் வாகனமான பச்சைக்கிளி  இருப்பதோ இங்கே .பூனை இருப்பதோ பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால்.சொற்ப கால இடைவெளியில் இது
எப்படி சாத்தியப்படும்.ஆனால் தாங்களே அதை சாத்திய படுத்திவிட்டீர்கள்.

வார்த்தைகளின்றி உறைந்து நின்றாள் சக்தியின் உருவான மீனாட்சி.

இது தான் விதியின் வாய்க்குள் நாமே  தலையை விடுவதோ!

இது தான் விதியின் விளையாட்டோ!

இதற்கு கடவுள் ஒன்றும் (விதி)விலக்கு அல்ல... 






2 கருத்துகள்: