பக்கங்கள்

வியாழன், டிசம்பர் 08, 2011

மனோதோடு பேசுங்கள்...


மனித இனத்தைவிலங்குகளிலிருந்து வேறுபடுத்திக் காண்பிப்பதே

அந்த ஆறாவது அறிவு(பகுத்தறிவு) தான்.

பகுத்தறிவுக்கும் மனித மனதிற்கும் நிறைய தொடர்பு உண்டு.

மனித மனத்தின் சூட்சமம்(நிலை) பகுத்தறிவின் பரிமாணங்களில் தான் உள்ளது.

சந்தோசம்,துக்கம்,விருப்பு ,வெறுப்பு,நேசம்,கோபம் போன்ற அனைத்தும்
இந்த பகுத்தறிவின் வெவ்வேறு பரிமாணங்களே.

கட்டுப்பாடின்றி,எல்லையை மனம் கடக்கும் போது தான் பகுத்தறிவு நம்மை விட்டு விலகி சற்றும் பொருந்தாத விலங்குகளுகே ஒப்பான வெளிப்பாடுகள்
உங்களுக்குள்  எட்டிப்பார்க்கிறது.

மனதிற்கு இயற்கையான  வடிவமோ,நிறமோ அல்லது பாலினமோ இல்லை.

ஆனால் இவை அனைத்தும் பகுத்தறிவின் சாரம் மாறும் போது மனதிற்கு கிடைக்க பெறுகிறது.

குறிப்பாக...

நேசிக்கும்(இது பகுத்தறிவின் ஒரு பரிமாணம்) ஒவ்வொரு ஆணும் தன் மனதை பெண்ணாகவும்,ஒவ்வொரு பெண்ணும் தன் மனதை ஆணாகவும் கற்பனை செய்துகொள்வதுண்டு.அவர்கள் இருவரும் தங்கள் மனதிற்கு
 நிறத்துடன் கூடிய வடிவங்களையும் கொடுத்துக்கொள்வதுண்டு.

உங்களுடன் அதிக நேரம் யாசிப்பது  உங்கள்  மனது மட்டுமே.

உங்கள் மனதை சரியாக  அளவிட உங்களை தவிர யாராலும் முடியாது.

உங்கள் மனதை முதலில் நேசிப்பதும்,வெறுப்பதும் நீங்கள் தான்.

அதை கட்டுப்படுத்தினால்,அது தான் உங்கள் உற்ற நண்பன்.

அதை கட்டுப்படுத்த வில்லையெனில்,அது தான் உங்கள் முதல் எதிரி.

கட்டுப்பாடில்லா  மனதில் தான் பயம் பற்றிக்கொள்ளும்.

பயத்தின் பிடியில் பகுத்தறிவின் நேர்மறை பரிமாணங்கள் எதிர்மறையாக
மாறிப்போவதுண்டு.

அதாவது...

அன்பு(வெறுப்பு), இனிமை(கசப்பு), மகிழ்ச்சி(கோபம்), திருப்தி(பொறாமை) மற்றும் நிறைவு(பேராசை).

இவை அனைத்தும் மனதின் மீதான பகுத்தறிவின்  வெளிப்பாடுகளே...

நீங்கள் அன்போடு தான் பிறந்தீர்கள்.

அது குறையும் போது வெறுப்பு முகம் காட்டுகிறது.

நீங்கள் இனிமையோடு தான் பிறந்தீர்கள்.

அது குறையும் போது கசப்பு கலந்துவிடுகிறது.

நீங்கள் மகிழ்ச்சியோடு தான் பிறந்தீர்கள்.

அது குறையும் போது கோபம் தலை தூக்குகிறது.

நீங்கள் திருப்தியோடு தான் பிறந்தீர்கள்.

அது குறையும் போது பொறாமை ஆட்கொள்கிறது.

நீங்கள் நிறைவோடு தான் பிறந்தீர்கள்.

அது குறையும் போது பேராசை ஊற்றேடுக்கிறது.

நீங்கள் அழகாக தான் பிறந்தீர்கள்.

அது குறையும் போது தாழ்வு மனப்பான்மை தோள் சாய்கிறது.

இவை அணைத்தும் உங்களுக்குள் ஒன்று சேரும்பொழுது.

உங்களுடைய அழகான வாழ்கையை மனதளவில் சிதைக்கவும்,
வதைக்கவும் செய்து உங்கள் தலையணையை கண்ணீரால் நனைத்து வெளியே வரும்போது மற்றவர்களுக்காக முகப்பூச்சுடன் பொய்யாக புன்னகைகிறீர்கள்.இல்லையா?

முரண்பாடாக வாழ முற்படுகிறீர்கள்.

உதாரணத்திற்கு...

நீங்கள் குளிர்காலத்தில் அனல் மூட்டுகிறீர்கள்.

வெயில் காலத்தில் குளிர்ச்சாதனப்பெட்டியை நாடுகிறீர்கள்.

இல்லாததை தான் மனம் ஈர்க்கிறது.

கிடைகாததற்கு தான் மனம் கிரங்குகிறது.

காணாமல் போனததற்கு தான் மனம் கலங்குகிறது.

உங்கள் மனதை அதன் பாதையில்  விட்டு விடாதீர்கள்.

உங்கள் வாழ்வின் தடம் மாறிபொகக்கூடும்.

அதை மென்மையாக கையாளுங்கள்.

நிலைமாறும் தருணங்களில்,உங்கள் இரு கால்களையும் ஓடும் நீரில்
நனைத்து கொண்டு,அமைதியாக சுற்றி தென்படும் இயற்கையுடன் மனதை ஒன்றி யாசிக்க கற்றுகொள்ளுங்கள்.

குளிர்ந்த நீரின் சாரம் உங்கள் உச்சந்தலைவரை பற்றிக் கொள்ளும்.

பூக்களின் வாசம் உங்கள் மனதின் கணத்தைக் குறைக்கும்.

பறவைகளின்  சத்தம் உங்களின் செவிகளுக்கு இனிமை சேர்க்கும்.

தூரத்து நீர்வீழ்ச்சி உங்களை கவர்ந்திழுக்கும்.

மௌனம் உங்களை முழுவதுமாக ஆட்கொள்ளும்.

உங்களுக்குள் அதீதமாக ஆற்றல் பெருகும்.

அப்படியே...

ஒரு கணம் உங்கள் விழிகளை மூடி திறந்து பாருங்கள்.

உங்கள் மனம் உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும்.

வாழ்க்கை உங்கள் வசப்படும்.

வெள்ளி, நவம்பர் 04, 2011

அதிர்ஷ்டம் இல்லாமல் போனால்...

என் மேசையிலிருந்து...

பல நாட்களாகவே எனக்குள் முரண்பாடாக தோன்றும் இரு தமிழ் வார்த்தைகள்.

1. அதிர்ஷ்டம்

2. வாய்ப்பு

வேறுபடுத்த முடியாமல் குழம்பியநாட்கள்  தான் அதிகம்.

உங்கள் பார்வையில் அதிர்ஷ்டம் மற்றும் வாய்ப்பு, எப்படி?

இரண்டும் ஒன்றா அல்லது வேறுபட்டவையா?

என் சிந்தனை வசபட்ட இந்த நிகழ்வை கடந்த பிறகு உங்கள்
பதிலை பகிர்ந்து கொள்ளுங்கள்.

இயற்கையால் ஆசிர்வதிக்கப்பட்ட ஒரு கிராமம்.

மக்களின் உள்ளம் கவர்ந்த ஒரு நிலக்கிழார்(ஜமீந்தார்).

அவருக்கு ஒரு அழகான மகள்(அனைத்து அம்சங்களுடன்).

அவளுக்கு அனைத்து வகையிலும் பொருந்தும் ஒரு சராசரி
குடும்பத்தை சேர்ந்த  இளைஞன்.

கால சக்கரத்தின் சுழற்சியால் அவள் அவன் கண்ணில் பட.

அவளை மணம் முடிக்க எண்ணினான்.

மறுகணமே அவனது கால்கள் நிலக்கிழார் முன் போய் நின்றது.

தன்  விருப்பதை வெளிப்படுத்தினான்.

ஒரு கணம் திகைத்தாலும், அவனுடைய தைரியத்தை கண்டு
சம்மதம் தெரிவித்தார்.

ஆனால்,ஒரு நிபந்தனையுடன்.

என்னவென்றால்...

அவர் வளர்க்கும் மூன்று காளை மாடுகளில் ஏதேனும் ஒன்றை அடக்கி அவனுடைய வீரத்தை நிரூபிக்க வேண்டும்.

அதாவது மூன்று வாய்புகள்.

இல்லையேல்...

அவனுடைய ஆசை நிறைவேறாது.

இவனும் ஏற்று கொண்டு தயார் ஆனான் அந்த தருணத்திற்காக.

அந்த நாள் வந்தது.

ஒரு பெரிய மைதானம்.

ஒரு புறம் இந்த இளைஞன்.

மறுபுறம் கொம்பு தீட்டப்பட்ட மூன்று காளை மாடுகள் ஒன்றன்
பின் ஒன்றாக  ஆக்ரோஷத்துடன்.

சுற்றிலும் கிராம மக்கள் பெரிய எதிர்பார்ப்புடன்.

மணி ஒலிக்க...

முதல் காளை இவனை நோக்கி விரைந்தது.

தனது மொத்த பலத்தையும் கையில் கொண்டு அதனை
எதிர்கொள்ள நினைத்தான்.

அதன் கூரிய இரு கொம்புகள் இவன் கண்ணில் பட, விலகி கொண்டான்  பயத்தில்.

முதல் வாய்ப்பை நழுவ விட்டான்.

இப்பொழுது...

இரண்டாவது காளை இவனை நோக்கி விரைந்தது.

சற்றே, அதிகமான பலத்துடன் அதனை எதிர்கொள்ள நினைத்தான்.

இம்முறை, அதன் சீரும் கண்கள் இவனை மிரள வைக்க,
விலகி நின்றான்.

இரண்டாவது வாய்ப்பையும் நழுவ விட்டான்.

அவன் மனம் பதைபதைத்தது.

அப்பெண்ணின் முகம் இவன் முன் வந்து சென்றது.

செத்தாலும் பரவா இல்லை, எப்படியாவது அந்த கடைசி
வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்ற முடிவு எடுக்கிறான்.

அதன்படி  சீறி வரும்  அந்த மூன்றாவது காளையை தன்
கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர எண்ணி பாய்ந்து அதன் வாலை
பிடிக்க முற்படுகிறான்.

அவன் துரதிஷ்டம், அந்த காளைக்கு வால் இல்லை.

தோல்வியான முகத்துடன் விடைபெறுகிறான்.

இந்த நிகழ்வின்  வாயிலாக நான்  கூற முற்படுவது

என்னவென்றால்...

ஒவ்வொரு காளையும்  ஒரு வாய்ப்பு.

அதனுடைய வால் தான் அதிர்ஷ்டம்.

அவனுக்கு மூன்று வாய்புகள் கொடுக்கப்பட்டது.
  
முதல் இரண்டு காளைகளுக்கு வால் இருந்தன.

இவன் பயன்படுத்திக்கொள்ள  முற்படவில்லை.

வாலை பற்றி கொள்ள எண்ணியபோது,

அந்த காளைக்கு  வால் இல்லை.

இப்படி தான் நம்மில் பலர் இச்சமுதாயத்தில் அதிர்ஷ்டத்துடன்
கூடிய வாய்ப்புகளை பற்றி கொள்ள தெரியாமல்
ஓடிகொண்டிருக்கிறோம்.

நமது வாழ்நாளில்,நம் வீட்டுக்  கதவை   அவ்வப்போது பல வாய்ப்புகள் தட்டுவதுண்டு.

ஆனால்...

அதில் எந்த  வாய்ப்பு  அதிர்ஷ்டத்தை தாங்கி வருகிறது
என்பதை கண்டறிந்து பற்றிக்கொள்வதில்  தான்  நம் வெற்றி உள்ளது.

வியாழன், நவம்பர் 03, 2011

உனக்காக...

மன இறுக்கத்தில்  இருக்கும் உனக்கு
நான்(உலகம்) உதிரும் சில வரிகள்.

வெளியே மழை ...

ஒற்றை ஜன்னல்...

இருள் சூழ்ந்த கூடாரம்...

நீ மட்டும் தனிமையில்...

கண்களில் ஆட்பரிக்கும்  நயாக்ராவோடு.

சற்றே வெளியே வா ...

உன்னுடைய மனப்போராட்டத்தை 
என்னிடம் பகிர்ந்துகொள்.

என்னை ஒரு குப்பை தொட்டியாக நினைத்து உன் மனதை தைக்கும் விஷயங்களை  என்னிடம் கொட்டிவிடு.

உன் நிலை புரிந்து...

நீ ஏன் இப்படி? என்று நான் உன்னை கேட்டதை காட்டிலும்
நான் ஏன் இப்படி? என்று நீயே உன்னை கேட்கும் பொழுது தான் 
உன் மனத்தினுடைய  வலி என்னை அதிகமாக கனக்க செய்கிறது.

உன்னுடைய தோல்வி(இழப்பு) உன்னையே உனக்கு புரிய வைக்க
ஒரு சந்தர்ப்பமே.

இழப்புகள்  இல்லா  மனிதன் இவ்வுலகில் இல்லை.

இழப்புகள் இல்லை  எனில் அவன் தன் வாழ்நாளில் எந்த ஒரு
செயலையும் செய்ய  முயற்சிக்கவில்லை என்பது தான் உண்மை.

இவ்வுலகில் மோசமான  ஒன்று என்னவென்றால் உன்னையே நீ
தாழ்த்தி கொண்டு வருத்தப்படுதல் தான்.

வலி  கண்டு விரக்தி கொள்ளாதே...


சூழல் ஒருபோதும்  உன்னை  உருவாக்குவதுமில்லை,
காயப்படுத்துவதுமில்லை.

எனது பெரிய மாற்றத்தை உன்னிடமிருந்தே  எதிர்ப்பார்க்கிறேன்.

இதோ உனக்கான என் வார்த்தைகள்...
. மற்றவர்கள் ஒரு சாதாரண வாழ்க்கையை தேர்ந்தெடுக்கட்டும்.

    நீ அல்ல...
மற்றவர்கள் சற்றும் பொருந்தாத  விஷயங்களுக்காக
    விவாதம் செய்யட்டும்.

    நீ அல்ல...
. மற்றவர்கள் சிறு வருத்தங்களுக்காக  கண்ணீர் சிந்தட்டும்.

    நீ அல்ல...
. மற்றவர்கள் தங்களது வாழ்க்கையை பிறர் கையில் ஒப்படைக்கட்டும்.

    நீ அல்ல...


சந்தோஷம் என்பது நீ எப்படி இருக்கிறாய்,கையில் என்ன கொண்டுள்ளாய்
என்பதிலில்லை.நீ என்ன நினைக்கிறாய் என்பதில் தான்.


உன்னை  சார்ந்தவர்களால்  காலம் தாழ்த்தி வரும் சந்தோஷத்திற்காக காத்திராதே.

இன்றே,ஒவ்வொரு கணப்பொழுதின்  சந்தோஷத்தையும்
உன்னுடையதாக ஆக்கிகொள்.

இல்லையேல்...

இன்றிலிருந்து இருபது  வருடங்கள் கழித்து வருத்தப்பட  கூடும்
இன்று  நீ வாழ மறந்த வாழ்க்கை நினைத்து.

இவ்வுலகில் உனக்கு ஒரே ஒரு வாழ்க்கை மட்டுமே.
அது கையில் உள்ள உன்னுடைய இப்போதைய வாழ்க்கையே.

முடியாது என்பது முட்டாள்களின் அகராதியில்  மட்டுமே காணப்படும்
ஒரு வார்த்தை.

உனது வெற்றியின் முதல் ரகசியம் உன் மீது  நீ வைத்திருக்கும்
நம்பிக்கையை விட உன் மீது நீ வைத்திருக்கும் விருப்பமே.

உன்னால் முடிந்த விஷயங்களை செய்ய துவங்கும்போழுது
உனக்கான வெற்றி உறுதி.

காலம் தாழ்த்தாதே,இன்றே துவங்கு..

எவருடைய வாழ்க்கையிலும் "முக்கியமில்லா நாள்" என்ற ஒன்று கிடையாது.

ஒன்று தெரியுமா?

நீயும்  நானும்  மட்டுமே முடிவில்லா வாய்ப்புகளை உருவாக்க
பிறந்தவர்கள்.

நாம் இருவர் மட்டுமே அனைத்து வாய்ப்புகளும்  சாத்தியமாகும் உலகில் வாழ்கிறோம்.

எனவே அனுபவங்களை சேமித்து வை.

அவமானங்களை அல்ல.

ஒரு நாளில் மூன்று முறையாவது இன்று உனக்கு எது முக்கியமானது என்று உனக்குள் கேட்டுப்பார்.அன்றைய தினத்தின் முக்கியத்துவம் புலப்படும்.

எளிமையாக நடந்த்துகொள்.அது தான் உன்னை நிலைபடுத்தும்  உன் அறிவின் சாவி.

முழுமையான வாழ்க்கையை வாழ்ந்தவர்கள் ஒரு போதும் தன் மரணம் கண்டு அஞ்சுவதில்லை.

 எனவே,உன் இழப்புகளை தவிர்த்து கடைசி நிமிடம் வரை உன் வாழ்க்கையை உன் வசப்படுத்து.

திங்கள், அக்டோபர் 10, 2011

மரணம் எனது பார்வையில்



 மரணம் ....     
 .    நாம் சுவாசிக்க மறந்த தினம். 
 .   இத்துணைகாலம் நம்முடைய எல்லா   எண்ணங்களுக்கும் 
      தகுந்தாற்போல் தன்னை ஆட்படுத்திக் கொண்ட 
      நம்சரீரதிற்கான ஒரு பிரிவு உபச்சாரவிழா.

மரணம்....
எவரும் எதிர்கொள்ள 
    விரும்பாத ஒரு வினை..
நிச்சயக்கபடாத ஒரு நிகழ்வு.

இவ்வுலகில் பிறக்கும் எப்பால் இனத்தவரும் தம் மரணத்தை
ஏற்று கொள்ளவதில்லை.

சற்றே கற்பனை செய்து பாருங்களேன்...

நாம் பயணிக்கும் விமானம் திடீரென்று இரண்டாக பிளந்து,
ஒராயிரம் அடி உயரத்திலிருந்து நாம் கீழ் நோக்கி விழுந்தால்
எப்படி இருக்கும்?

மரண  பயத்தை ( தேதி  குறிக்கபட்ட மரண தண்டனை கைதியிடம்
கேட்டு பாருங்கள்)  ஒவ்வொரு நொடி பொழுதும் நமக்கு தெரிய படுத்தி கொண்டிருக்கும் நாம் இனிக்க இனிக்க வாழ்ந்த இதே உலகம், இல்லையா?

நம் கண் முன்னே நம் உயிர் பிரிவதை எதிர்கொள்ளும் சக்தி
நம்மிடம் இல்லை என்பது அப்பொழுதுதான் புலப்படும்.

இதே போல்....

உங்களுடைய ஆயிசு இன்னும் ஒரு வார காலமேயென்று
எவரேனும் கூறினால் உங்கள் மனநிலை தான் என்ன?
. நெஞ்சு பதபதைக்கும்.
. இருப்பதெல்லாம் இல்லாதது  போலவும், இல்லாதவையெல்லாம்
    இருப்பது போலவும் உள்ளூர  ஒரு உணர்வு பற்றிகொள்ளும்.
. அன்றுவரை சுவாசிப்பதையே உணராத நீங்கள் உணர முற்படுவீர்கள்.
. உடல் உறுப்புகள் அனைத்தும் இருப்பதாக உணர நேரிடும்.

    (ஒரு நாள் முழுவதும் நீங்கள் சுவாசிப்பதாகவும் எல்லா உறுப்புகளுமே
     உங்களுக்கு  இருப்பதாக  உணர்ந்து தான் பாருங்களேன் பார்க்கலாம்.
     அன்றைய பொழுது நரகமாக மாறிபோகும்.)
. இருக்ககூடிய நாட்கள் நம்மளுடையதாக இருக்காது.
. எவரிடமும் அனுசரணையாக நடந்து கொள்ள இயலாது.
. உணவு என்ற ஒன்று அவசியம்தானா என்ற கேள்வி எழும்.
. உறக்கம் உங்கள் கைவசம் இல்லாமல் போகும்.
. பிடித்த அத்துனை விஷயங்களும், நபர்களும் நமக்கு பிடிக்காமல் 
    போகக் கூடும்.

இவை அனைத்தையும் விலக்கி  வைக்க, தனிமையை தேடி சென்றால்..

அந்த தனிமையும்  சற்று அதிகமாகவே மிரட்டும்.

மொத்தத்தில் எஞ்சிய சந்தோஷமான தருணங்களை இழந்து
நாம்  நாமாக இருக்க இயலாமல் போகிவிடும்.

ஒரு மனிதன் சந்திக்கும் மரணத்தை இவ்வாறெல்லாம் வகைபடுத்தலாம்.
.  வயது முதிர்வினால் ஏற்ப்படும் இயற்கை மரணம்.
.  விபத்து போன்ற  எதிர்பாராத மரணம்.
.  நோய்வாய்ப்பட்டு இரத்தல்.
.   கூட்ட நெரிசலில் உயிர் பிரிதல்.
.   இயற்கையின் சீற்றத்தினால் மரணத்தை எதிர்கொள்ளுதல்.
.   போர்களத்தில் உயிர் பிரிதல்.
.   விலங்குகளுக்கு பலியாகுதல்.
.   என்கவுன்ட்டர் போன்ற துப்பாக்கி சூட்டில் உயிர் விடுதல்.
.   கொலை செய்யப்படுதல்.
.   மரணதன்ன்டனை விதிக்கப்பட்டு உயிர் நீத்தல்.
.   கருணைக்கொலை செய்யப்படுதல்.
.   தற்கொலை செய்துக்கொள்ளுத்தல்.
.   சிசுக்  கொலை.
.   கருகலைப்பு.

நம் உயிர் பிரியும் நாளை முன்னதாகவே  நம்மால் கணிக்க இயலுமா?

சாத்தியமென்றால்....

நாம் அனைவரும் நம்மை சார்ந்தவர்களுக்கு ஒரு இறப்பு அழைப்பிதழை
அனுப்பி வைக்கலாம் அல்லவா!

ஜனனமும்,மரணமும் ஒரு வகையான நிகழ்வுகளே.

ஜனனம் என்பது சுற்றத்தாரின் ஆட்பரிக்கும் சந்தொஷங்களுக்கிடையே 
அழுது கொண்டே இவ்வுலகிற்கு விருந்தாலியாக காலடி வைத்தல்  .

மரணம் என்பது சுற்றத்தாரின் ஆட்பரிக்கும்  சொகங்களுக்கிடையே அமைதியாக இவ்வுலகிலிருந்து விடைபெற்று கொள்ளுதல்.

ஜனனத்தின் அழுகுரல் இவ்வுலகை கண்டு மிரளுவதர்க்கான வெளிப்பாடு.

மரணத்தின் அமைதி இவ்வுலகை விட்டு விடுதலையாகுவதர்க்கான வெளிப்பாடு.

ஜனனத்தை பெருமிதமாய் ஏற்றுக்கொள்ளும்  நாம் மரணத்தையும் அப்படியே ஏற்று கொள்வோமே!

நீங்கள் வாழும் ஒவ்வொரு நாளையும் மனதார நேசியுங்கள்.

மரணம் ஒரு போதும் உங்களை ஒரு கொடுவாவை கொண்டு மிரட்டாது.

மாறாக, அது ஒரு பூங்கொத்தை கொண்டு இனிதாய் வரவேற்கும்.




சனி, அக்டோபர் 08, 2011

அரசமரத்தடி ரகசியம்

புதிதாய் மணம் முடித்த பெண்கள் அதிகாலையில் அரச மரத்தை சுற்றுவது ஏன் தெரியுமா?

பெண்களின் கர்ப்பத்திற்கும்,அரசமரதிற்கும் ஒரு அறிவியல்   சார்ந்த தொடர்பு உண்டு.

அரசமரம் என்றாலே  நமக்கு நினைவுக்கு வருவது என்ன?

ஆம், உங்கள்  யூகம் சரிதான்.


முழுமுதற்கடவுளான விநாயகர்(பிள்ளையார்) தான்.

அதோடு,அரசமரத்தடியில் விநாயகருக்கு நேர் பின்புறம் இருக்கும் ஒரு கற்சிலை உங்கள் ஞாபகத்திற்கு வருகிறதா?

ஆம்,பின்னிய நிலையில்  உள்ள இரு நாக பாம்புகளை  உருவகபடுத்தும் அந்த  நாகதேவதை   சிலை வடிவத்தை தான் கூறுகிறேன்.
சற்றே ஞாபகப்படுத்தி பாருங்கள்...

இந்த  பின்னிய ரிப்பன் (double helix) வடிவமைப்பை
தான் நம் செல்லினுள்உள்ள ஒரு DNA பெற்றுள்ளது.

இந்த கற்சிலையை கொண்டுள்ள அரசமரத்திற்கும்,
மனிதகுலத்திற்கும்(குறிப்பாக பெண்களுக்கு)மறுக்க
முடியாத ஒரு தொடர்பு உண்டு.

அது பலருக்கும் நேரடியாக  சொல்லபடாத நம் முன்னோர்களால் கண்டறியப்பட்ட ஒரு அறிவியல் உண்மை.

நான் உங்களிடம் பகிர்ந்து கொள்ள இருப்பது  நம் நாட்டில் இன்றும் கிராமப்புறங்களில்(நகர்ப்புறங்களில் வெகு குறைவாக) தொன்று தொட்டு கடைபிடிக்கப்பட்டு வரும் ஒரு வழக்கை பற்றி தான்.

இந்த கட்டுரையின் துவக்கத்தில் நான் கேட்ட கேள்வியை மீண்டும்  ஒருமுறை வாசித்துபாருங்கள்.

அரசமரத்திற்கும்,அதை சுற்றி வரும் பெண்களுக்கும் அப்படி என்ன தான்  தொடர்பென்று உங்களால் யூகிக்க முடிகிறதா?

இங்கு தான் அந்த அறிவியல் உண்மை புதைந்து கிடக்கிறது.

நான் குறிப்பிட வருவது என்னவென்றால்...

அரசமரத்திலிருந்து வெளிப்படும் ஒரு மருத்தவ குணம் கொண்ட
வாயுவை அதிகாலையில்(மாசற்றதாக இருக்கும்)  சுவாசிக்கும்  பெண்களுக்கு  கருவுருதலுக்கான முயற்சி சற்றே  தீர்க்கமாக  அமையும் என்பது    மருத்துவர்களின்   கருத்து.


இந்த அறிவியல்  சார்ந்த உண்மையை நம் முன்னோர்கள் முன்பே கண்டுணர்ந்து புதிதாய் மணம்  முடித்த பெண்கள் அரசமரத்தை சுற்றும் வழக்கை உருவாக்கி உள்ளார்கள்.

அதிகாலையில் அரசமரத்தை சுற்றும் பெண்கள் அனைவரும்
வெளிப்படும் வாயுவை சுவாசிப்பதோடு மட்டுமில்லாமல்  மனித செல்லினுள் காணப்படும்  DNA  வின்  பின்னிய ரிப்பன்  வடிவத்தை
(double helix) மனதில் கற்பனைசெய்துகொண்டால்  முழுமையான கற்பதிர்கான  சாத்திய கூறுகள் அதிகரிக்க கூடும்.

இதை கருத்தில் கொண்டு தான் நம் முன்னோர்கள் அந்த நாக தேவதை கற்சிலையை அரசமரத்தின் அடியில் வைத்துள்ளார்கள் என்பது என் அனுமானம்.ஒவ்வொரு சுற்றிலும் அந்த சிலையை தொட்டு  வணங்கும்
பொது  DNAவின் வடிவம் அவர்களின்  மனதை ஆட்கொள்ளும் அல்லவா.

இது பல தலைமுறைகள் தாண்டிய நம் முன்னோர்களின் ஆச்சரிய பட வைக்கும் அறிவியல் சார்ந்த அனுமானம்.

ஆனால்....

இந்த கற்சிலையில் காணப்படும் வடிவமானது, போலந்தை சேர்ந்த
அறிவியல் விஞ்ஞானிகள் வாட்சன்  மற்றும் கிரிக் கண்டறிந்த DNA வின்  இரட்டை வலை பின்னல்(double helix) வடிவத்திற்கு முழுவதுமாக ஒத்து
போகிறது. இந்த நூற்றாண்டின் ஒரு மிகபெரிய கண்டுபிடிப்பிற்காக அவர்களுக்கு நோபெல் பரிசும்  வழங்க பட்டுள்ளது.

எனக்குள் ஏற்படும் ஒரு சந்தேகம் என்னவென்றால்....

DNA  வின் வடிவத்தை கண்டறிந்த வாட்சன் மற்றும் கிரிக் நம் தமிழ்நாட்டிற்கு ஒருமுறை பயணம் செய்திருபார்களோ!

நமது பொக்கிஷமான அரசமரத்தடி  ரகசியத்தை தெரிந்து கொண்டு தனது  கண்டுபிடிப்பை மேம்படுத்திருப்பார்களோ!

அப்படியானால் DNA  விற்கு உண்மையான வடிவம் கொடுத்தது நாம் தானோ!

அதாவது நம் முன்னோர்கள்!!!

நோபெல் பரிசு குழு இதை மீண்டும் பரிசீலிக்க வேண்டும்.






















ஞாயிறு, அக்டோபர் 02, 2011

தலையெழுத்தாக மாறிப்போன தலையாய எழுத்து

                                                             
ஜனிக்கும் ஒவ்வொரு ஜீவராசிக்கும் 
இவ்வுலகம் எப்படியென்று ஒரு போதும்
தெரிவதில்லை.

இவ்வுலகம்...
.சிகப்பு கம்பளம் விரித்து தன்னை மலர்
  தூவி வரவேற்க போகிறதா?
  அல்லது
.மர்மங்களை முன்னிறுத்தி தன்னை     
  மிரள வைக்க போகிறதா?
  இல்லை
.ஏதும்  புரியாத ஒரு காட்சிபேழையாய்  மட்டும் தன் முன் தோன்ற
  போகிறதா?

என்ற கேள்விகளுடனே  துவங்குகிறது அதன் பயணம்.
இக்கணம் , உள்ளூர  எனக்கு தோன்றுவது என்னவென்றால்...
"இது எதோ முகவரி இல்லாத ஒரு ஊருக்கு அவ்வுயிர்  செய்யும் ஒரு தலையாய பயணம் மென்று"

ஜனித்த காரணத்திற்கான ஒரு மாபெரும் தேடல் என்று கூட கூறலாம்.
. இந்த பயணத்திற்கான பயணச்சீட்டு எங்கே கிடைக்கும்?
. அதன் விலை தான் என்ன?
 . எங்கிருந்து  எப்பொழுது  புறப்பட வேண்டும்?
எவரிடம் அனுமதி பெறவேண்டும்?
என்ன உடை அணிய வேண்டும்?
. பயண நாட்களும், தூரமும்  தான் என்ன?
. பயணிக்க போகும் வாகனம் எப்படி இருக்கும்?
. தனியாக தான் பயணிக்க வேண்டுமா இல்லை எவரேனும்
    வழிகாட்டி  உண்டா?
. அவர் எப்படிபட்டவர் மற்றும்  என்ன மொழியில் பேசுவார்?
. சந்திக்க போகும் நபர்கள் எத்தனை ?
அவர்கள் அனைவரும் எப்படி இருப்பார்கள்?
. அவர்கள் அனைவரும் எப்படி நடந்து  கொள்வார்கள்?
.  பயணம் எப்படி இருக்கும்?
.  இடையே ஓய்வு உண்டா?
. ஓய்வு எடுக்கும் இடம் தான் எங்கே?
பயணத்தின் முடிவு எப்படி தான் இருக்கும்?

இப்படியாக ஜனிக்கும் உயிரின் ஆழ்மனதினுள்  தொடரும் அனைத்து கேள்விகளுக்கும்....

இப்பிரபஞ்சத்தை படைத்தவன் வாய் முகூர்த்தமாக பதில் கூறாமல்
ஜனிக்கும் உயிரை தாங்கும் சரீரத்தின்  தலையில் அவன் எழுதி வைத்தது தான் தலையெழுத்து.

இந்த தலையெழுத்து தான் இவ்வுலகில் ஒரு உயிர் ஜனித்த
காரணத்திற்கான தேடலைத்(அதன் வாழ்க்கையை) தீர்மானிக்கிறது.
ஜனனத்திற்கும் மரணதிற்குமான  கால அவகாசம் அதனிடமே உள்ளது.


அதன் கையில் ஒரு உயிரின் வாழ்கை என்பது கணிக்க முடியாத ஒரு சதுரங்க ஆட்டம் தான் இல்லையா? 

நிகழகூடியவை சந்தோஷமாக இருப்பதும் துக்கமாக இருப்பதும் தலையெழுத்தின் கையில் தான் உள்ளது.

ஏனோ தெரியவில்லை...
தனக்கு ஏற்படும் அனைத்து  துரதிஷ்டமான நிகழ்வுகளுக்கும்  மட்டும்  
தலையெழுத்தை காரணமாக குறிப்பிடும்போது, தனக்கு ஈற்படும்
அனைத்து சந்தோஷமான நிகழ்வுகளுக்கும் அதுவே காரணமென்று ஏற்று கொள்ள இந்த மனது முன்வருவதில்லையே. ஏன் ?

இந்த தலையெழுத்து என்ன நமக்கு துன்பத்தை மட்டுமே கொணர்கிறதா?
இல்லை,..

இன்பத்தையும் தான் என்பதை மறந்து விட கூடாது.

ஜனிக்கும் ஒவ்வொரு உயிரின் தலையிலும் படைப்பவன் எழுதும் தலையெழுத்து என்ன தெரியுமா?

"உன்னால் முடியும்" என்ற வலிமை பொருந்திய இரண்டெழுத்து
 மந்திர சொல்லை தான்.

இதை  தலையெழுத்து என்று குறிப் பிடுவதை விட  தலையாய எழுத்து என்று குறிப்பிடுவது பொருத்தமாக  அமையும்.

இங்கு ஒரு பொதுவான நிகழ்வை குறிப்பிட விரும்புகிறேன்.

பள்ளிக்கு செல்ல தயாராக இருக்கும் சிறு குழந்தைகளை நாம்  சற்றே
வீட்டில் உற்று கவனித்தால் புலப்படும்.அவர்களுக்கு உயரத்தில் இருக்கும் பொருட்களின் மீதே நாட்டம் அதிகம்  இருக்கும்.தனக்கு அந்த உயரம் எட்டாததாக இருப்பினும் ஏதேனும் ஒன்றின் மீது  ஏறி நின்று உயரே தன்னை கவர்ந்த அந்த பொருளை கைகொள்ள முயற்சிப்பார்கள்.
ஏன் தெரியுமா?  உன்னால் முடியும் என்ற  தலையாய எழுத்து
அவர்களை உசுப்புவதால் தான்.

ஆனால்...

இதனை கவனிக்கும் தாய்மார்களோ  அவர்களின் முதுகில்
இரண்டுகொடுத்து உன்னால் முடியாது போ என்று 
அவர்களின்  முடியும் என்ற மந்திர  சொல்லைமுடியாது என்ற
எதிர்மறை சொல்லாக அந்த சிறு வயதிலேயே மாற்றி விடுகிறார்கள்.

இதே போல்,மற்றொரு நிகழ்வையும் குறிப்பிட விரும்புகிறேன்.

சிறு  குழந்தைகளை ஈர்க்கும் மற்றொரு பொருள் இருசக்கர வாகனம்.
தனது தந்தை இருசக்கர வாகனத்துடன் வெளியில் செல்ல முற்படும் பொது தானாக ஓடிவந்து ஏறி உட்கார்ந்துகொண்டு இரு கைபிடிகளையும் பிடித்துகொண்டு ஓட்டுவதற்கு முயற்சிப்பார்கள்.  உன்னால் முடியும் என்ற அந்த தலையாய எழுதுத்தின் உந்துதலால்,

ஆனால் தந்தைமார்களோ  அதெல்லாம் உன்னால் முடியாதென்று கீழே இறக்கி விடுவார்கள்.அங்கேயும் அவர்களின் முடியும் என்ற நம்பிக்கை முடக்கப்படுகிறது.

கால போக்கில் முடியும் என்ற தலையாய எழுத்து , முடியாது என்ற தலையெழுத்தாக மாறி போய்விடுகிறது.

அவர்கள் வளந்த பிறகு அவர்களால்முடியகூடிய 
அனைத்து விஷயங்களும் முடியாமலே போய்விடுகிறது.

இத்தனைக்கும் காரணமாக பெற்றோர்களே 
இருந்துவிட்டு குழந்தை வளர்ந்த பிறகு உன்னால் 
எந்த ஒரு விஷயமும்   முடிவதில்லையே  என்று
ஆதங்கப் படுவதில் எந்த ஒரு பிரயோஜனமும்
இல்லை என்பது என் பக்க வாதம்.

ஒரு கணம் அனைத்து பெற்றோர்களும் இதை
சிந்தித்து பாருங்கள் உங்கள் குந்தைகள் உங்கள்
வசப்படுவார்கள் எந்த வயதிலும்.













புதன், செப்டம்பர் 21, 2011

விதியின் விளையாட்டு



அன்று  சொர்க்கத்தில் உள்ள லீ மெரிடியன் ஹோட்டல் கலை கட்டியிருந்தது.
   
அந்த ஐந்து  நட்சத்திர  ஹோட்டலின் போர்டிகோ(முகப்பு வாயில்) முழுவதும் ஏகபோக ஆரவாரத்துடன் ஆடம்பர உடை சகிதமாக காட்சியளித்தார்கள்   உலகின்(பெரிய மற்றும் சிறிய )கடவுள்கள் அனைவரும்.

அன்றைய தினம் பிரம்மா(ஆக்கும்கடவுள்)
தலைமையில் ஹோட்டலின் கான்பெரென்ஸ் ஹாலில் ஒரு சிறப்பு கூட்டம் ஏற்பாடு செய்யபட்டிருந்தது(அப்படி அவர்களுக்குள் என்ன தான் பிரச்சனையோ அந்த கடவுள்களுக்கு  தான் வெளிச்சம்).

ஒவ்வொரு  கடவுளும் தங்களுடைய வாகனத்தை அருகாமையில் பார்க் செய்து விட்டு பரபரப்பாக கூட்டம் நடக்கும் ஹாலை நோக்கி விரைந்தார்கள்.

இந்த அவசர கூட்டம் பற்றிய விஷயத்தை   சொர்க்கத்தில் உள்ள ஒரு ஆருயிர் நண்பன் எனக்கு மின்னஞ்சல்  மூலமா தெரிய படுத்த.
உடனே ஹோட்டல் லீ மெரிடியன்(சொர்க்கதில்உள்ள பிரான்ச்)
முகப்பு  வாயிலுக்கு  படையேடுத்தேன். 

கூட்டம் இன்னும் 1௦ நிமிடங்களில் துவங்க போகும் தருணம்.

ஒரு சில கடவுள்கள் என் கண்ணில் தென்பட்டார்கள்.

ஆம்....... 

விநாயகர் தன்னுடைய மூஞ்சிரு வாகனத்தை பார்க் செய்து விட்டு உள்ளே விரைந்தார்.

மதுரை மீனாட்சி தன்னுடைய பச்சைக்கிளி வாகனத்தை  பார்க் செய்து விட்டு உள்ளே விரைந்தார்.

கூட்டம் துவங்க இன்னும் 5  நிமிடங்களே உள்ள தருணம்.

கடைசியாக கம்பீரமாக உள்ளே வந்த எமதர்மன் தன்னுடைய எருமை வாகனத்தை பார்க் செய்யும் போது அருகே நின்ற பச்சைக்கிளியை ஒருமுறை நக்கலாக பார்த்து சிரித்து விட்டு விரைந்தார் தனது  
இருக்கையை ஆட்கொள்ளவதற்கு. 

ஆனால் இங்கு மனதினுள் ஒரு பதபதைப்பு எற்பட்டது  பச்சைகிளிக்கு.
ஆம் அதற்கு தெரியும் எமதர்மன் நக்கலாய் சிரித்தால் மரணம் உடனே அழைக்கிறது என்று.

ஒரே இடத்தில் நிம்மதியாக  இருக்க முடியாமல் இங்கும் அங்குமாக அலாவிகொண்டிருந்தது அந்த அற்ப உயிரி அடுத்து தனக்கு என்ன நிகழ போகிறது என்று தெரியாமல்.

தன்னை இந்த குழப்பமான சூழலிருந்து விடுவித்து கொள்ள தனது எஜமான் மதுரை மீனாட்சியின் வரவிற்காக காத்து கொண்டிருந்தது...

கூட்டம் இனிதே முடிவுற வெளியே வந்த  மீனாட்சியிடம் தனது
நிலையை கண்ணீர் ததும்ப விளக்கியது பச்சைக்கிளி.

நிலைமையை அறிந்த மீனாட்சி உடனே அங்கு வந்த சித்திரகுப்தனிடம் கிளியை பார்த்து எமதர்மன் நக்கலாய் சிரித்ததன்   காரணம் கேட்டதும்,வெகுண்டாள் மீனாட்சி.

தனது வாகனமான பச்சைகிளியின் விதியானது(உயிர் இன்னும் சில
வினாடிகளில்முடிய போகிறது)முடியும் தருவாயில் 
இருப்பதை தன் குறிப்பேட்டில் பார்த்து  சித்திரகுப்தன் கூறியதுதான் காரணம்..

தனது வாகனத்தை எமன் சீண்டுவதா என்று கர்ஜித்து கொண்டு,எமன் வந்து பச்சைகிளியின் உயிரை எடுக்கும் முன் அதனை பல ஆயிரம்  
மைல்களுக்கு  அப்பால் இருக்கும் ஒரு  மலைஅடிவாரத்தில் கொண்டு
போய் மறைத்து வைத்தாள் மீனாட்சி.ஏனெனில் சில நிமிடங்களே இருக்கும்  நிலையில் எமனால் அவ்வளவு நெடுந்தொலைவிற்கு
பயணித்து பச்சைகிளியை கண்டு கொள்வதற்குள் அதன் விதி காலம் முடிந்து உயிர்பிழைக்கும் அல்லவா.

நிம்மதி பெருமூச்சுடன் நின்று கொண்டிருத்த மீனாட்சிக்கு 
அருகே மௌனமாய் வந்து நின்றார் எமதர்மன்.

கோபமாய் எமனை எதிர்நோக்கிய மீனாட்சி தன் வாகனத்தை பார்த்து ஏளனமாய் எள்ளி நகைத்தன் உள் அர்த்தம் வினவினால்.

மீண்டும் மெல்லியதாய் நகைத்து கொண்டு எமன் கூறினான்,

"அன்னையே உங்கள் வாகனத்தை நான் பார்த்த பொழுது அதன் தலை விதி எனக்கு சுட்டி காட்டியது என்னவென்றால்..இன்னும் சில நிமிடங்களில்.பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இருக்கும் 
ஒரு மலையடிவாரத்தில் ஒரு  பூனையால் கடிபட்டு  உங்கள் வாகனமான பச்சைக்கிளி உயிர் நீக்க போகிறதென்று"

நான் நகைததற்கு காரணம் உங்கள் வாகனமான பச்சைக்கிளி  இருப்பதோ இங்கே .பூனை இருப்பதோ பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால்.சொற்ப கால இடைவெளியில் இது
எப்படி சாத்தியப்படும்.ஆனால் தாங்களே அதை சாத்திய படுத்திவிட்டீர்கள்.

வார்த்தைகளின்றி உறைந்து நின்றாள் சக்தியின் உருவான மீனாட்சி.

இது தான் விதியின் வாய்க்குள் நாமே  தலையை விடுவதோ!

இது தான் விதியின் விளையாட்டோ!

இதற்கு கடவுள் ஒன்றும் (விதி)விலக்கு அல்ல... 






திங்கள், செப்டம்பர் 19, 2011

பழக்க வழக்கங்கள்

வாழையிலையின் தலைப்பகுதி இடது பக்கம் இருக்க வேண்டிய அவசியமென்ன?


சாதத்துடன் கறிவகைகளைச் சேர்த்துப் பிசைவதற்கு, இலையின் அகன்ற பகுதி வலப்புறமாக இருந்தால் வசதியாக இருக்கும்.

வாழை இலை போட்ட பின் அதைச் சுற்றி மூன்று முறை தண்ணீர் தெளிப்பதற்கான காரணம் என்ன?

இலையிலுள்ள உணவை நோக்கி எறும்புகள் படையெடுக்கா வண்ணம் தடுக்க.

முதலில் காகத்தைக் காகா என அழைத்து சாப்பாடு வைத்துப் பின்னர் நாம் சாப்பிடுவது ஏன்?

உணவில் நஞ்சு கலந்திருக்கிறதா என்பதைக் கண்டறிய.

கனவுகள்...


கனவுகள் நம் வாழ்க்கையின்
மிச்சங்களா?

நம் உள்மனத்தின் பிரதிபலிப்பபா?

நம் வாழ்க்கையில் நடக்காத விஷயங்கள் கொஞ்சம்
அதிகமாக உயிரூட்டப்பட்டு கனவாக மாறுகிறதா?

கனவுகளில் வண்ணங்கள் உண்டா?

கனவுகளில் வரும் முகங்களோ, உருவமோ நிஜமாக இருக்க முடியுமா?

ஆழ்ந்த உறக்கங்களில் கன்வுகள் வருவதில்லை என்றும், ‘ நான்ரெம்’ எனப்படும் பாதி நிலை உறக்கங்களில் கனவுகள் தோன்றுகிறது என்றும் சில புத்தகங்காளில் படித்திருக்கிறேன்.

[இயற்பியல் பயின்ற நான் சைக்கலாஜி ப்ற்றியோ, கனவுகள் பற்றியோ படிப்பது மற்றும் பேசுவது அவசியம் தானா என்பது நீங்கள் கேட்பது எனக்கு புரிகிறது. ஆனால் அடிப்படையில் சைக்கலாஜி  படிக்கும் ஆர்வம் இயற்பியல் படித்தவர்களுக்கு  கொஞசம் அதிகம் தான் என்பது என் கருத்து]

என் பார்வையில் கனவு என்பது...

இரவின் கருப்புத் திரைப்படங்கள்...

கற்பனையின் காட்சி தத்ரூபங்கள். ..

உள் மனத்தின் உணர்ச்சி வெளிப்பாடுகள்…..

ஆம்...

ஒவ்வொரு  இரவிலும் நாம் உறங்கிய பிறகு நம் மூளையானது  அன்று காலை எழுந்தது முதல் உறங்க செல்வதற்கு முன் வரை நாம் செய்த அணைத்து  நிகழ்வுகளையும் மீண்டும் ஓட்டிபாற்கும்...
இந்த கருப்பு திரை படங்களுக்கான காட்சிகளை அரங்கேற்றம் செய்வது
நமது ஆன்மா தான்.
  

ஞாயிறு, செப்டம்பர் 18, 2011

நம் மனதிற்கு இரண்டு நிலைகள் உண்டு...

நம் மனதிற்கு இரண்டு  நிலைகள் உண்டு...

1.உணர்வு நிலை.

2.குண நிலை.

உணர்வு என்பது மனதின் தற்காலிக நிலை.
குணம் என்பது மனதின் நிரந்தர நிலை.


நம் மனதானது  தற்காலிக நிலையில் சஞ்சலிக்கும் பொழுது தான்
சந்தோசம்,துக்கம்,விருப்பு,வெறுப்பு,கோவம்,பசி போன்ற
உணர்வுகள் நமக்கு வெளிபடுகின்றன.
நம் மனதானது நிரந்தர நிலையில் சஞ்சலிக்கும் பொது தான் நன்னடத்தை,தீயநடத்தை,சந்தேகம் கொள்ளுதல்,
அன்பாக நடந்துகொள்ளுதல் போன்றவைகள்  குணங்கள் நமக்கு வெளிப்பாடுகின்றன.

எப்பொழுது  ஒரு உணர்வானது மீண்டும் மீண்டும்  பல தருணங்களில் ஒரு மனிதனுக்கு எட்டிபார்கிறதோ அது கால போக்கில்   அவனுடைய குணமாக மாற கூடும்.

இங்கு நான் கேட்க விரும்பிகிற விஷயம் என்னவென்றால் கோவம்,வெறுப்பு, போன்றவற்றை  குணமாகிக்  கொண்ட மனிதன் ஏன் சந்தோஷத்தை ஒரு குணமாக மாற்றி கொள்ளவில்லை  இன்னும்?

இந்த  நிலை நீடித்தால் நம் அடுத்த சந்ததியர்கள் சந்தோசம் என்பது
இப்படி தான் இருக்கக்கூடும்  என்று அருங்காட்சியகத்தில் சென்று தான் படைப்புகள்,ஓவியங்கள் மற்றும் சிலைகள் வாயிலாக தெரிந்து கொள்ள கூடும்.
அனைவரும் சிரிக்க(புன்னகைக்க)  கற்றுகொள்ளுங்கள்.


புதன், செப்டம்பர் 14, 2011

ஒரு துளி...

ஒரு துளி விந்து.. 
ஒரு துளி குருதி...
ஒரு துளி வேர்வை ...
ஒரு துளி கண்ணீர் ..
ஒரு துளி சிறுநீர்...
ஒரு துளி பால்...
ஒரு துளி மோர்...
ஒரு துளி தயிர்..
ஒரு துளி பழரசம்...
ஒரு துளி தேன்...
ஒரு துளி  குழம்பு...
ஒரு துளி  பேனா மை...
ஒரு துளி அமிலம் கரைசல்...
ஒரு துளி கார கரைசல்...
ஒரு துளி உப்பு கரைசல்...
ஒரு துளி நீர்...
ஒரு துளி மழை....
ஒரு துளி விஷம்...
ஒரு துளி மதுபானம்...
ஒரு துளி  சர்க்கரை பாகு...
ஒரு துளி சூப்....
ஒரு துளி நெய்...
ஒரு துளி எண்ணெய்...
ஒரு துளி வர்ணம்...
ஒரு துளி சாயம்..
ஒரு துளி கசாயம்...
ஒரு துளி பாயசம்...
ஒரு துளி  ஹார்மோன்...
ஒரு துளி எஸ்சென்ஸ்...
ஒரு துளி குழம்பி...
ஒரு துளி தேநீர்...
ஒரு துளி பண்ணீர்...
ஒரு துளி வாசனை திரவியம்...
ஒரு துளி பசை...
ஒரு துளி வினிகர்...
ஒரு துளி பாணக்கம்...
ஒரு துளி இளநீர்...
ஒரு துளி கஞ்சி...
ஒரு துளி  பாதரசம்...
ஒரு துளி மருந்து...
ஒரு துளி பெட்ரோல்...
ஒரு துளி மண்ணெண்ணெய்...
இப்படியாக தொடரும் இந்த ஒரு துளி...
இவை அனைத்தும்  தன் அளவில் ஆதிக்கம் செலுத்தினால் இப்பிரபஞ்சத்தை காக்க கடவுளாலும் முடியாது.