பக்கங்கள்

செவ்வாய், மே 15, 2012

இப்படியும் திருக்குறள்...


     ஒரு டாஸ்மார்க் கடையின் விளம்பரப்

     பலகையில்...


    " வருக வந்து குடிக குடித்தபின்
        
      ஆடுக  அதற்கு தக."

    ஒரு கல்லூரி வளாகத்தில்...

     " நாம்நோக்கும்  பிகர்  நமை நோக்கா

        நாம்நோக்கி என்ன பயன்."

    ஒரு  உணவகத்தில்...
 
     " ஆட்டலில் ஆட்டல் மாவாட்டல் அவ்வாட்டல் 
 
        சரவணபவ ஹோட்டலில் ஆட்டல்."

    ஒரு பேரூந்து  நிறுத்தத்தில்...

      " பிகரென வாழ்வினில் வந்துவிட்டால் மற்றாங்கேல்

         பிரன்ஷிப்பே நாறி  விடும்."

     ஒரு வகுப்பறையில்...

     " உறக்கத்தில் சிறந்த உறக்கம் பாடம்நடத்தும்
 
        போது  வரும் உறக்கம்."
   
     ஒரு  தொலைக்காட்சித் தொடரை பார்க்கும் பொழுது...

    " செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்

       எட்டுமணிக்கு  மேல்  திருமதிச்செல்வம்." 

    ஒரு மாணவனுடைய புத்தகத்தில் ...

    " அகர முதல எழுத்தெல்லாம் தகர

       சிலேட்டில் மட்டுமே எழுதப்படும்."

    ஒரு குட்டிச்சுவற்றில்....

     "  கற்பவரை  தாங்கும் வகுப்பறையைப் போல
      
         கல்லாதவரைத்   தாங்கும் குட்டிச்சுவர்."

    ஒரு  கரும்பலகையில்...

      " தாயின்றி  அமையாது அன்பு அதுபோல
  
         ஆசானின்றி  அமையாது  அறிவு."


திங்கள், மே 14, 2012

கண்ணாடிப் பெண்...



உன் கனவும் நீ...

உன் நிஜமும் நீ...

உன் நினைவும் நீ...

உன் நிகழ்வும் நீ...

உன் வலியும் நீ...

உன் இனிமையும் நீ...

உன் மௌனமும் நீ...

உன் மொழியும் நீ...

உன் விருப்பமும் நீ...

உன் செயலும் நீ...

உன் புன்னகையும் நீ...

உன் அழகும் நீ...

ஒரு வரியில் சொன்னால்...

உனக்குள் நீ ஒரு கண்ணாடி.