பக்கங்கள்

வெள்ளி, ஜனவரி 20, 2012

ஒரு தேவதை உருவாக...

அன்பான கணவன்.

அமைதியான மனைவி.

அவர்களுக்குள்...

 ஆத்மாத்தமான காதல்.

எதிர்பார்கவில்லை...

அவளுடைய மரணம்

அவர்களை

பிரித்து வைக்குமென்று.

அவளை நினைத்து

அவனது கண்கள்

பொங்கின.

 நாட்கணக்கில்...

மாதகணக்கில்...

இப்படியாக

பொழுதுகள் பல

அவன் கைவிட்டு போயின.

அழுகை மட்டுமே

எட்டிப்பார்த்தது அவனுக்கு

நெருக்கமானவர்களின்  ஆறுதல் கேட்டு.

ஒரு நாள் இரவு.

ஆழ்ந்த உறக்கம்.

அவனது

கனவில்...

சொர்க்கம்.

அவனைச் சுற்றி

மெழுகுவர்த்தி ஏந்திய  தேவதைகள்.

கண்கள் தேடின

இறந்துப் போன

அவன் ஆசை மனைவியை.

கண்டு கொண்டான் அவளை

ஒரு தேவதை உருவாக...

கண்கள் குளிர்ந்தன.

உதடுகள் அவள் பெயரை மட்டுமே உச்சரித்தன.

மனது ஒரு இறகாகிப்  பறந்தது.

கால்களை கட்டுப் படுத்த முடியவில்லை.

அருகே ஓடினான்.

அவள் மட்டும்

கையில் ஏற்றப்படாத மெழுகுவர்த்தியுடன்.

காரணம் கேட்டான்.

அவள் கூறினாள்.

" ஒவ்வொரு முறையும் நான் அதை ஏற்றும் போதும்

   உங்கள்  கண்ணீர் அதை அணைத்து விடுகிறது.

   உங்கள்  வாழ்வில்...

   நான், இங்கிருந்து ஒளிவூட்ட ஆசைப்படுகிறேன்.

   எனக்காக, அழுகையை நிறுத்திக்கொள்ளுங்கள் ,

   என் இதயமானவரே !"

அவளுடைய வார்த்தைகளை  ஏற்றுகொண்டான்.

அவள் மீதான ஞாபகங்களை தனது  பொக்கிஷமாக்கிகொண்டான்.

ஆம்...

அவனது ஒவ்வொரு நாள் பொழுதிலும் அவள் ஒளிவூட்டினாள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக